Monday, 13th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி 15-வது நிதிகுழு 2022-2023 திட்டத்தில், 12 மின்கலம் மூலம் இயங்கும் வாகனங்கள் ரூ. 24.00 லட்சம் மதிப்பீட்டில் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் விழா பள்ளிபாளையம் நகராட்சி திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் தாமரை வரவேற்புரை ஆற்றினார். நகர திமுக செயலாளர் அ.குமார். பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவர் மோ.செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் S.M.மதுரா செந்தில் தலைமை தாங்கி, தூய்மை பணியாளர்களுக்கு பேட்டரி வாகனங்களை வழங்கி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திமுக நகரப் பகுதி நிர்வாகிகள், நகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.